Posts

Showing posts from August, 2021

பேராசை

 நிரப்ப முடியாத பாத்திரம்! பேராசை பற்றி சுஃபி இலக்கியத்தில் ஒரு பிரபலமான கதை உண்டு! ஒரு முறை அரசா் ஒருவா் தனியாக நகா்வலம் போய்க் கொண்டிருந்தாா்.  அப்போது பிச்சைக்காரன் ஒருவன் எதிா்ப்பட்டு அரசாிடம் பிச்சைக் கேட்கிறான்.  "என் அமைதியைக் கெடுக்காதே" என்று அரசா் விரட்ட, பிச்சைக்காரன் சிாிக்கிறான்!   "அரசே! உங்கள் அமைதி கெடக்கூடிய நிலையில் அதற்குப் பெயா் அமைதியே கிடையாது!" "எதிாிலிருப்பவன்  வெறும் பிச்சைக்காரன் இல்லை... யோகி"  என்பதை அரசா் உடனே புாிந்து கொண்டு "துறவியே... உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் கேளுங்கள் கொடுக்கிறேன்!" என்று சொல்ல, துறவி மீண்டும் சிாிக்கிறாா். "அரசே! உங்களால் முடியாததை எல்லாம் கொடுக்க முடியும் என்று சத்தியம் செய்யாதீா்கள்!" இப்போது அரசருக்குக் கோபம் வந்து விட்டது.  நகா்வலத்தைப் பாதியிலே நிறுத்தி விட்டுத் துறவியை அழைத்துக் கொண்டு அரண்மனைக்கு வந்தாா்.  துறவி தனது பிச்சைப் பாத்திரத்தை நீட்டி,  "இது நிறைய எனக்குப் பொற்காசுகள் கொடுங்கள்!" என்று கேட்க, "பூ! இவ்வளவுதானா?" என்று அரசா்  கைதட்ட... பொிய தாம்...

செங்கோல் சுதந்திரம்

Image
இனிய சுதந்திர தினம் செங்கோல் சிறப்பு. வரலாறு_முக்கியம் பாரத சுதந்திரத்தைப் பெற்றது ஒரு தமிழர்! சுதந்திரம் பெறும் போது ஒலித்தது தமிழ்! உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை புதிய இரத்தத்தை பாய வைக்கும் செய்தி இது.  மெளண்ட்பேட்டனிடமிருந்து செங்கோலைப் பெற்றது நம் திருவாவடுதுறை ஆதீனத்து கட்டளைத் தம்பிரான் தான் என்றால் யார் ஏற்றுக்கொள்வர்? அதுவும் திருஞானசம்பந்த பெருமானின் கோளறு பதிகத்தை ஆதீன ஓதுவார் பாடி முடித்த பின்னரே பெறப்பட்டது என்றால்… ‘அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே!’ அடடா! இந்நாடு விடுதலை பெற்றது சம்பந்தரின் செந்தமிழ் வாக்கினால் என்னும்போது உடல் சிலிர்க்கிறது; உள்ளம் பூரிக்கிறது. எத்தனையோ மொழிகள் இந்நாட்டில் நிலவ நம் செந்தமிழ் ஒலிக்க நாடு விடுதலை பெற்றது!  சுதந்திரம் அளிக்கிறோம் என்ற முடிவை நேருவிடம் ஆங்கில அதிகாரி மெளண்ட்பேட்டன் நள்ளிரவில் கூறினார். நேரு சுதந்திரத்தை அறிவித்து நம்மவர் அரியணை ஏறும் அதிகாரபூர்வ விழாவிற்கு நேரு ஏற்பாடு செய்வதில் முனைந்தார். அவரோ சடங்குகள், மதங்களில் பழக்கம் இல்லாதவர்.எனவே, இராஜாஜி அவர்களிடம் கூறினார்.   மூதறிஞர் உடனே திருவாவடுதுறை ஆத...

தமிழும் தேனும்

தமிழுக்கு இனிமை என்றொரு பெயர் உண்டு. காரணம் ஏன் தெரியுமா? *தேன்* கொண்டு வந்தவனை பார்த்து நேற்று ஏன் *தேன்* கொண்டுவரவில்லை என்று ஒருவர் கேட்கிறார். அதற்கு அவன் கூறிய இனிமை பொருந்திய பதில்.. ஐயா நீங்கள்   கூறியதை நினைத் *தேன்* ! கொல்லிமலைக்கு  நடந் *தேன்*! பல இடங்களில் அலைந் *தேன்*!    ஓரிடத்தில் பார்த்   *தேன்*! உயரத்தில் பாறைத் *தேன்*! எப்படி எடுப்பதென்று மலைத்   *தேன்*! கொம்பொன்று ஒடித் *தேன்*! ஒருகொடியை பிடித்   *தேன்* ! ஏறிச்சென்று கலைத்   *தேன்*! பாத்திரத்தில் பிழிந்   *தேன்*! வீட்டுக்கு வந்   *தேன்*! கொண்டு வந்ததை வடித் *தேன்*! கண்டுநான் மகிழ்ந் *தேன்*! ஆசையால் சிறிது குடித்   *தேன்* ! மீண்டும் சுவைத் *தேன்* ! உள்ளம் களித் *தேன்*! உடல் களைத் *தேன்* ! உடனே படுத் *தேன்*! கண் அயர்ந் *தேன்*! அதனால் மறந் *தேன்*! காலையில் கண்விழித் *தேன்*! அப்படியே எழுந் *தேன்*! உங்களை நினைத் *தேன்*! தேனை எடுத் *தேன்*! அங்கிருந்து விரைந் *தேன்*! வேகமாக நடந் *தேன்*! இவ்விடம் சேர்ந் *தேன்*! தங்கள் வீட்டை அடைந் *த...

ஆனந்தமாக வாழுங்கள்

  ஆனந்தமாக வாழுங்கள் 1) உங்கள் துணியை நீங்களே முதலில் துவைக்க பழகுங்கள். அதுவே நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு சொல்லாமல் சொல்லும் முதல் பாடம். 2) காலையில் எழுந்தவுடன் குளித்து இறைவனைத் வணங்குங்கள். உங்கள் மனைவிக்கு சொல்லாமல் சொல்லும் இரண்டாவது பாடம். 3) முடிந்தால், சமயலறையில் முடிந்த உதவிகளை செய்யுங்கள். நம் வீடு. நாம் செய்வோம். இது கூட்டு குடும்பத்தின், கூட்டு முயற்சியில் நாம் சொல்லாமல் சொல்லும் மூன்றாவது பாடம். 4) காபி குடித்தவுடன் , அதை முடிந்தால் அலம்பி வைக்கவும். இல்லையென்றால்அலம்பும் இடத்தில் வைக்கவும். இது நமக்குள்ளே ஒரு கட்டுப்பாட்டை வைத்துக் கொள்ள உதவும். இது நமக்கான  நான்காவது பாடம். 5) எங்கெல்லாம் உதவி செய்ய முடியுமோ, வீட்டில் உதவுங்கள். அது முக்கியமான ஐந்தாவது பாடம்- மற்றவர்களுக்கு உதவும் பழக்கம் வர வேண்டும். 6) காலை காபி குடிக்கும் போதோ, இல்லை எது சாப்பிட்டாலும் , குறை கூறாதீர்கள். வேண்டுமென்றால் நல்ல முறையிலே கூறுங்கள். கோபமும், அதட்டலும், நமக்கு ரத்த அழுத்தம் தரும். இது ஆறாவது பாடம். 7) உண்ணும் முன், பெரியவர்கள் இருந்தால், அவர்களை கேளுங்கள் -சாப்பிட்டு விட்டார்களா...

ஐயன் திருவள்ளுவர்

திருவள்ளுவரின் எழுத்துநடை கண்டு வியந்தேன் மகிழ்ந்தேன் பகிர்ந்தேன் ஐயன் அதிகம் பயன்படுத்திய சொல் ''படும், தரும், இல்'' அதன் எண்ணிக்கை கீழ்வருமாறு. படும் = 42, தரும் = 37, இல் = 32, கெடும் = 29, என்னும் = 24, இல்லை = 22, செயல் = 22, எல்லாம் = 21, தலை = 21, காமம் = 20, கொளல் = 20, பவர் = 19, பெறின் = 19, தவர் = 19, இன்பம் = 18, விடல் = 18, உலகு = 18, அரிது = 18, கண்ணும் = 18, யவர் = 18, விடும் = 17, கண் = 17, கடை = 16, தற்று = 16, செயின் = 16, நட்பு = 15, வேண்டும் = 15, நன்று = 15, இன்னா = 15, இன்மை = 14, உடைத்து = 14, வார் = 14, எஞ்ஞான்றும் = 14, வரும் = 13, வேந்தன் = 13, ஆற்றின் = 13, மன்னவன் = 13, தார் = 13, பெருமை = 13, ஆக்கம் = 12, கேண்மை = 12, சொல் = 12, என்று = 12, துணை = 12, பிற = 12, இனிது = 12, நெஞ்சு = 11, என்பது = 11, செல்வம் = 11, பேதை = 10, துன்பம் = 10, கொல்லோ = 10, யாதெனின் = 10, இடும்பை = 10, வாழ்க்கை = 10, பேதைமை = 10, செய்யும் = 10, வினை = 10, காணின் = 10,  • கீழ்வரும் #5சொற்கள்_வரிசை திருக்குறளில் 2 முறை  மீண்டும் மீண்டும் வந்துள்ளது 1. கண்இணை நோக்கொக்க...

மழைமானி Rain gauge

பழந்தமிழரின்  மழைமானி என்றால் என்ன.? ஆட்டுக்கல் தான் அது வெறுமனே மாவு அரைப்பதற்கு மட்டுமல்ல ,அந்தக் காலத்தில் அதுதான் மழைமானி. வீட்டு முற்றத்தில்தான் பெரும்பாலும் ஆட்டுக்கல் இருக்கும். முதல்நாள் இரவில் மழை பெய்திருந்தால் அதன் குழிக்குள் நீர்நிறைந்திருக்கும். அந்நீரை விரலால் அளந்து பார்த்து அது ஓருழவுக்கு ஏற்ற மழையா அல்லது ஈருழவுக்கு ஏற்ற மழையா என்பதை அறிந்துக்கொள்வர். மழைப்பொழிவின் பழைய கணக்கு முறை “செவி” அல்லது “பதினு” எனப்படும். இது 10 மி.மீ அல்லது 1 செ.மீட்டருக்கு சமமானது. மழையின் அளவுக்கும் நிலத்தின் ஈரப்பதத்துக்கும் தொடர்பு உண்டு. இதனை ‘பதினை’ என்றனர். அறிவியல் கணக்குபடி 18 மி.மீ வரை மழை பெய்தால்தான் அதை முறையாக மண் உறிஞ்சிடும். ஆக எத்தனை “பதினு” மழை பெய்திருக்கிறது எனத் தெரிந்துக்கொண்டு முதல் உழவுக்கு தயாராவார்கள். மழைக்குப் பெய்திறனின் அடிப்படையில் தமிழில் பெயர் வைக்கப்பட்டிருந்தது. “தூறல்” – பசும்புல் மட்டுமே நனைவது. விரைவில் உலர்ந்துவிடும். “சாரல்” – தரைக்குள் ஓரளவு நீர் செல்லும். “மழை” – ஓடையில் நீர்ப்பெருக்கு இருக்கும். ” பெருமழை” – நீர்நிலைகள் நிரம்பும். ” அடைமழை” – ஐப்...

தமிழ்நாட்டு ரெட்டியார்கள் Reddys of Tamilnadu

ரெட்டிகள் - தமிழகமெங்கும்.  840 கூட்டமும், 320 குலங்களும் 36 பிரிவுகளும் கொண்ட ரெட்டிகள் தமிழகம் முழுவதிலும் வாழ்கின்றார்கள் என அரசாங்க குறிப்புகளிலும், "தட்சண ராஜ்ய சம்பூரண யாத்திரை" என்ற நூலில் பார்த்த சாரதி நாய்டுகாரும், "ரெட்ல கோத்தராலு" என்ற நூலில் கஸ்தூரி ரெட்டிகாரும் குறிப்பிடுகின்றனர்.  கடந்த 15 ஆண்டுகளாக நான் தமிழகப் பகுதிகளில் உள்ள 5000 ஆயிரம் ரெட்டி ரெட்டி கிராமங்களில் 4300 கிராமங்கள் வரை நேரடியாகச் சென்று பார்த்தேன். ரெட்டி சமூக வைதீகப் பழக்கங்கள், மொழி, ஆசாரம் , இவை முழுமையாக எங்கும் இல்லை. கலப்பு நாகரீகம், கலாச்சாரமாகவே காணப்படுகின்றன. ஆந்திர எல்லை பகுதிகளாக இருந்து வரும் சேலம், தர்மபுரி, வட ஆர்க்காடு, செங்கல்பட்டு மாவட்டங்களில் குலாசாரங்கள் இருந்து வருகின்றன என்றாலும் அவற்றையும் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது.   சென்னை முதல் திருவனந்தபுரம் வரை தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் நீங்கலாக ரெட்டிகள் எல்லா மாவட்டங்களிலும் பரந்து வாழ்கின்றனர். எங்கு வாழ்ந்தாலும் இப்போது ரெட்டிகள் முழுதும் கெட்டுப்போகவில்லை. ஆனால் நாளையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் கெட்டுப் போய்க்...

நட்புக்கு கர்ணன் True friend

"சபாஷ் கர்ணா" நட்புக்கு இலக்கணம் கர்ணன் கர்ணன் ஓர் ஒப்பற்ற வீரன் சூரியனின் புத்திரன் குந்தியின் மூத்த மைந்தன் கொடையில் சிறந்தவன் நட்பு எனும் இலக்கணத்தின் அடையாளம் இவன் இன்னும் எம்மவர்களிடையே மகாபாரத போரில் அர்ஜூனன் கர்ணனை விட பல சாலி என நினைத்துக்கொள்கின்றவர்கள் இருக்கின்றனர். அதாவது பகவான் கிருஷ்ணன் தனது முழு திறமையும் ,பல சாபங்களையும், தந்திரமாக கர்ணனிடம் பெற்ற வரங்கள்,கொடைகள். சூழ்ச்சிகளை கையாண்டு கர்ணனின் தாயான குந்தியை பயன்படுத்தியே பாண்டவர்களை வெற்றி அடைய செய்தார் இது யாவரும் அறிந்ததே போரில் பத்தாம் நாள் வரை  கௌரவ படை பின்னடைவையும் பாரிய இழப்புகளையும் சந்தித்து இருந்தது. கௌரவர்களின் நாயகன் அதாவது நம்பிக்கை நட்சத்திரம் என்று கூட கூறலாம். கங்கையின் மைந்தன் பீஷ்மர் கூட  அர்ச்சுனன்அம்பு பட்டு இறக்கும் தருவாயில் போரை பார்த்து போர்களத்திலே அம்பு படுக்கையில் படுக்கையில் காயம்பட்டுக்கிடந்தார். பத்தாம் நாள் இரவு கௌரவபடைகள் சஞ்சலம் ஏதும் இல்லாத ஏக்கம் அனைவருக்கும் கெளரவர்களை காப்பாற்ற யாரும் இல்லை.   அர்ஜுனனின் பாணங்கள்,வீமனின் கதாயுதம்,நகுலன் மற்றும் சகாதேவனின் வாள்வீச்...