தமிழும் தேனும்
தமிழுக்கு இனிமை என்றொரு பெயர் உண்டு. காரணம் ஏன் தெரியுமா?
*தேன்*
கொண்டு வந்தவனை பார்த்து நேற்று ஏன்
*தேன்*
கொண்டுவரவில்லை என்று ஒருவர் கேட்கிறார். அதற்கு அவன் கூறிய இனிமை பொருந்திய பதில்..
ஐயா நீங்கள்
கூறியதை நினைத்
*தேன்* !
கொல்லிமலைக்கு நடந் *தேன்*!
பல இடங்களில் அலைந் *தேன்*!
ஓரிடத்தில் பார்த்
*தேன்*!
உயரத்தில் பாறைத் *தேன்*!
எப்படி எடுப்பதென்று மலைத்
*தேன்*!
கொம்பொன்று ஒடித் *தேன்*!
ஒருகொடியை பிடித்
*தேன்* !
ஏறிச்சென்று கலைத்
*தேன்*!
பாத்திரத்தில் பிழிந்
*தேன்*!
வீட்டுக்கு வந்
*தேன்*!
கொண்டு வந்ததை வடித் *தேன்*!
கண்டுநான் மகிழ்ந் *தேன்*!
ஆசையால் சிறிது குடித்
*தேன்* !
மீண்டும் சுவைத் *தேன்* !
உள்ளம் களித் *தேன்*!
உடல் களைத் *தேன்* !
உடனே படுத் *தேன்*!
கண் அயர்ந் *தேன்*!
அதனால் மறந் *தேன்*!
காலையில் கண்விழித் *தேன்*!
அப்படியே எழுந் *தேன்*!
உங்களை நினைத் *தேன்*!
தேனை எடுத் *தேன்*!
அங்கிருந்து விரைந் *தேன்*!
வேகமாக நடந் *தேன்*!
இவ்விடம் சேர்ந் *தேன்*!
தங்கள் வீட்டை அடைந் *தேன்*!
உங்களிடம் கொடுத் *தேன்*!
என் பணியை முடித் *தேன்*!
என்றார் அதற்கு
*தேன்*
பெற்றவர்
தேனினும்
இனிமையாக உள்ளது உமது பதில். இதனால் தான் நம் முன்னோர்கள் தமிழை
தமிழ்த் *தேன்*
என்று உரைத்தனரோ? என கூறி மகிழ்ந் *தேன்*. என்றார். 💐
படித்ததில் ரசித் *தேன்*
சிந்தித் *தேன்*
பகிர்ந் *தேன்*..!
Comments
Post a Comment