வேங்கை மரம் Vengai Maram
அருகிவரும் குழந்தைகளுக்கு வேங்கைப் பால் திருஷ்டி பொட்டு வைக்கும் வழக்கம்! சேலம் மாவட்டம் பேளூர் அருள்மிகு தான்தோன்றிநாதர் திருக்கோயில் ஆடிப் பதினெட்டு விழாவினை முன்னிட்டு சேவார்த்திகளின் கூட்டம் அலைமோதும்.அப்பொழுது பல்வேறு பொருள்களை விற்கும் அங்காடிகள் நூற்றுக்கணக்கில் காணப்படும். அவ்வங்காடிகளில்,குழந்தைகளுக்குத் திருஷ்டிப் பொட்டாக வைக்க உதவும் வேங்கைப் பால் சிரட்டைகளை, விற்பனைக்குக் கல்வராயன் மலை மலைவாழ் மக்களான மலையாளிகள் [ மலையில் வாழ்பவர்கள் என்று பொருள்;தமிழ் பேசுகிற பழங்குடியினர்]கொண்டுவருவார்கள்.இவ்வாண்டு ஒரேவொரு அங்காடியில் தான் வேங்கைப் பால் சிரட்டைகளைக் காண முடிந்தது. இதனைப் பற்றி கேட்டதற்கு,'' வேங்கை மரங்களை முன்பு போல் காணமுடிவதில்லை;அருகிவிட்டன;இனி வருங்காலத்தில் காடுகளில் வேங்கைமரங்கள் இருக்குமோ இருக்காதோ ''என்று பதில் கிடைத்தது. வேங்கை மரத்தின் சிவப்பு நிற பிசின் உலர்ந்ததும் கருப்பாகி விடும். இந்த பிசினை குழந்தைகளுக்குத் திருஷ்டி பொட்டாக வைப்பர். '' வேங்கை மரத்துப் பிசின் குழந்தைகளுக்குத் திருஷ்டி போக...