Posts

Showing posts from October, 2022

மைசூர்பா Mysorepa

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் தயாரித்து விற்கப்படும் ஒரு ஸ்வீட் மைசூர்ப்பாகு. இதற்கும் மைசூருக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா என்ற கேள்விக்கு, பலரின் பதில் இல்லை ' என்பதாகவே இருக்கும். ஆனால், இந்த ஸ்வீட் பிறந்த இடம் மைசூர் மன்னரின் அரண்மனை என்றளவில் மிக நெருங்கிய சம்பந்தமிருக்கிறது. | 1884 முதல் 1940 வரையிலான காலகட்டத்தில் வாழ்ந்த மைசூர் மகாராஜா, கிருஷ்ணராஜா உடையார் தேர்ந்த ரசிகர். இசை, நடனம், இலக்கியம் போன்ற வற்றில் இருப்பது போலவே நல்ல உணவின் ரசிகர். அம்பா விலாஸ் அரண்மனை யில் பூஜைகளுக்கு நைவேத்தியம், பிரசாதம் தயாரிக்கத் தனிச் சமையல் அறை, ஐரோப்பிய நண்பர்களுக்கு விருந்து தயாரிக்கத் தனிச் சமையல் அறை, மன்னரின் ராஜபோஜனம் தயாரிக்கத் தனி அறை என்று ஒரு சமையல் வளாகமே இருந்திருக் கிறது. ஒரு நாள் மன்னர் முன்னறிவிப்பு எதுவுமில்லாமல் மதிய உணவுக்கு வந்து விட்டார். அவருக்குத் தினமும் உணவின் கடைசி அயிட்டம் அன்று செய்த சூடான ஸ்வீட்டாக இருக்க வேண்டும். அரண்மனையின் தலைமைச் சமையல்காரரான காக்கசுரா மடப்பா, அன்று அவசர அவசரமாக ராஜாவுக்கான மதிய உணவைத் தயாரித்துக் கொண்டிருந்த போது, திட்டமிடாததால் ஸ்வீட் ...

கொல்லி / சதுரகிரி மலை Kolli hills

இயற்கை அளித்த கொடைகள்- தினம் ஒரு தகவல். கொல்லிமலை         Kolli hills இயற்கை வளம் மிக்க கொல்லிமலை,கிழக்கு தொடர்ச்சி மலையின் ஒரு அங்கமாகும்.மிதமான வெப்பம்,மக்கள்நெரிசலற்ற சுற்றுச்சூழல் மாசுபடாத தன்மை காரணமாக இன்றும் பசுமை போர்த்தியுள்ள இடங்களில் கொல்லிமலையும் ஒன்று.  நாமக்கல்லில் இருந்து 55 கி.மீ தொலைவிலும் கடல் மட்டத்தில் இருந்து 1000 முதல் 1600 மீட்டர் உயரமும் உள்ள இம்மலை சுமார் 400 ச.கி. பரப்பளவு கொண்டது.  ஆத்தூர் வட்டத்துக் கொல்லி மலையிலுள்ள மிக உயர்ந்த சிகரம் வேடக்கார மலையாகும். அதன் உயரம் 4,663 அடி ஆகும். கொல்லும் கொடிய நோய்கள் நிறைந்தும், அத்தகைய கொடிய நோய்களையும் கொல்லும் அற்புத மூலிகைகள் கொண்டும் அழகுற விளங்குகிறது கொல்லி மலை. இம்மலைக் காடுகளில் நிலவிய கடுமையான சூழலின் காரணமாக, இம்மலைப் பிரதேசத்துக்கு கொல்லி மலை என்ற பெயர் வந்தது. கொல்லி எனப்படும் வானளாவிய மரங்களை உடையதாலும், மும்மலங்களையும் முனைப்பையும் கொல்வதாலும் இம்மலை கொல்லிமலை எனப்பட்டது என்றும் சொல்லுவதுண்டு. நான்கு புறமும் சதுர வடிவில் மலைகளால் சூழப்பட்ட பகுதியாக உள்ளதால் இது சதுரகிரி எனவும்...