ஆடி அமாவாசை
நமக்காக எத்தனையோ கஷ்டங்களை தாங்கிய நம் பித்ருக்களுக்கு, மஹாளபட்சம், அமாவாசை போன்ற நாட்களில் வெங்காயம், பூண்டு, வாசனை திரவியங்கள் போன்றவை வேண்டாம்.
கார்த்திகை மாதம் உத்திராயண
புண்ணியகாலம் சுக்ல பட்சம்,
பவுர்ணமி திதியில் தானம் செய்ய
வேண்டும். கிருஷ்ணபட்சம்
(தேய்பிறை) துவாதசி திதியில்
தானங்கள் அளிக்கலாம்.
எள், உப்பு, பொன், பருத்தி ஆடை,
இரும்பு ஆகியவற்றை தானம்
அளிப்பது மிகவும் நல்லது. தானம்
பெற வருபவரை மிகுந்த
மரியாதையுடன் நடத்தி தானமளிக்க வேண்டும்.
பித்ருக்கள் எங்கிருந்தாலும்
சரி, தத்தம் சந்ததியருடைய
நல்வாழ்விற்காகப் பாடுபடுகின்றனர் என்பதில் எள்அளவும் சந்தேகம் கிடையாது.
ஒருவர் மரண படுக்கையில்
அவதிப்படும்போது அவரது மகன்
அல்லது மகள் மகம் நட்சத்திரத்தன்று அகத்திக்கீரையை எருமை மாட்டிற்கு தானம் அளித்தால் மரண அவதி நீங்கும்.
வீட்டில் வயதானவர்கள் படுக்கையோடு அவதியுற்றால் பாய், தலையணை, படுக்கை விரிப்பு போன்றவற்றை தானம் செய்வது நன்மை அளிக்கும். எள்ளுருண்டை, கடலை உருண்டை போன்றவற்றை அளிப்பது பித்ருக்களின் ஆசியைக் கூட்டும்.
சாஸ்திரப்படி, சிரார்த்த காரியங்கள் செய்பவர் திருமணம் உள்ளிட்ட விழாக்களிலும் மற்றவர்
வீடுகளில் உணவு, உண்ணக்
கூடாது.
சிரார்த்தம் செய்யக்கூடியவர்
முதல் நாள் முகச்சவரம்
செய்யக்கூடாது. எண்ணெய்
தேய்த்து குளிக்கக் கூடாது,
மனைவியுடன் சேர்ந்து உறங்கக்
கூடாது, பிரஷ் கொண்டு பல்
தேய்ப்பதும், வெற்றிலை தாம்பூலம்
போடுவதும் கூடாது.
மங்கள நிகழ்ச்சிகள் நம் வீட்டில்
நடக்கும் பொழுது முதலில்
பித்ருக்களின் ஆசியை நாம்
முழுமையாக பெற வேண்டும்.
இது மிக, மிக முக்கியம்.
துவாதசி பன்னிரெண்டாம்
நாளன்று பித்ரு பூஜை செய்பவன்
சொர்ண லாபம் பெறுவான்.
திரயோதசி பதிமூன்றாம்
நாளன்று பித்ரு காரியங்களை சரிவர
நடத்துபவனுக்கு அறிவு, ஞான
சக்தி, பசுக்கள் தேக ஆரோக்கியம்,
சுதந்திரத்தன்மை, சிறந்த
விருத்தி, தீர்க்கமான ஆயுள் பலம்,
ஐஸ்வர்யம், அனைத்து பலன்களும்
தவறாமல் கிடைக்கும்.
சதுர்த்தசி அன்று பித்ரு வழிப்பாட்டை சிறப்பாக செய்பவர்களுக்கு அவர்களுடைய பித்ருக்கள் ஆயுதங்களால் தாக்கப்பட்டு இறந்திருந்தால் திருப்தி அடைவார்கள்.
மஹாளய அமாவாசை என்பது மிகவும்
புண்ணிய நாளாகும். அன்று நம்
பித்ருக்களை நினைத்து மனதார
வணங்கினால் சகல சவுபாக்கியங்களும் தேடி வரும்.
மாகளாய பட்சத்தின் 16 நாட்களும் சிரார்த்தம் செய்வது ஒப்பற்ற உயர்ந்த
வாழ்வை அளிக்கும்.
தர்ப்பணம் எனும் சொல்லுக்கு திருப்திப்படுத்துதல் என்று பொருள். இதில் வரும் மந்திரங்கள் அர்த்தம் பொதிந்தவை. அற்றை நன்கு தெரிந்து கொண்டு செய்வதால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.
தாய், தந்தையின் இறந்த திதிகளை மட்டும் நினைவு கொண்டு தர்ப்பண
காரியங்கள் செய்தால் போதும் எனும் பழக்கம் இன்று பலரிடத்தில்
ஏற்பட்டுள்ளது. குடும்பத்தில் இறந்த முன்னோர்கள் அனைவரையும்
நினைவு கூர்ந்து தர்ப்பண காரியங்கள் செய்ய வேண்டும். அதுதான் சிறப்பானது. முழு பலன்களையும் தரவல்லது.
குடும்பத்தில் சன்னியாசம் வாங்கிச்
சென்றவர்களுக்கு துவாதசி அன்று மஹாளய சிரார்த்தம் செய்வது மிக
முக்கியம்.
கோவில்கள், குளங்கள், கடல் போன்ற இடங்களில் செய்யப்படும்
தர்ப்பணங்களுக்கு மிக அதிகமான
சக்தி உண்டு.
திருவாலாங்காடு, திருவள்ளூர், ராமேஸ்வரம், திருமயம் அடுத்து வரும்
அரண்மனைப்பட்டி, திருவண்ணாமலை,
திருவிடைமருதூர், காசி, திருநள்ளாறு ஆகிய இடங்களில் தர்ப்பணம் செய்வது மிக சிறந்தது.
திலதர்ப்பணபுரி எனும் ஊரில்
(திருவாரூர்- பூந்தோட்டம்
இடையில் உள்ளது) தர்ப்பணம்
செய்வது மிக, மிக விசேஷமாக
கருதப்படுகிறது. இங்கு ஸ்ரீராமரும் லட்சுமணரும் தம் தந்தையான தசரத
மகாராஜாவிற்கு தர்ப்பணம் செய்தனர்
என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment